Saturday 11 June 2016

மூன்றே மாதத்தில் திருமணம்!

https://www.facebook.com/groups/gowrikayanam.mangalyam/permalink/1726179830957894/

Follow this blog

மூன்றே மாதத்தில் திருமணம்!
விழுப்புரம் அருகிலுள்ள சிறுவந்தாடு கிராமத்தில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி சனிக்கிழமையன்று மட்டைத் தேங்காய் கட்டி வழிபட்டால், மூன்றே மாதத்தில் திருமண யோகம் வரும் என்கின்றனர்.
தல வரலாறு: சோழ மன்னன் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில். விஜயநகர மன்னர் அச்சுதராயர் இங்கு திருப்பணி செய்ததாக கல்வெட்டு கூறுகிறது.
தற்போதுள்ள கோவில் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மண்டபம் முழுவதும் கருங்கல்லாலும், விமானம் மட்டும் சுதையாலும் ஆனது. கருவறையில் மூலவர் சுகாசனத்தில் அமர்ந்து, லட்சுமி தாயாரை வலது மடியில் தாங்கியபடி காட்சி தருகிறார். தாயார் வலக்கையால் பெருமாளை அணைத்த படியும், இடக்கையில் தாமரை மலரை ஏந்தியும் இருக்கிறார். கருவறை எதிரில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார். அர்த்தமண்டபத்தில் கனகவல்லி தாயார் சன்னிதி உள்ளது. கோதண்டராமர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. எலுமிச்சை மரமே இங்கு தல விருட்சம்.
பல்லி வழிபாடு: அர்த்த மண்டபத்தின் விதானத்தில் பல்லி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலுள்ள பல்லியைப் போலவே இதன் உருவ அமைப்பு உள்ளது. இதை தொட்டு வணங்குவதன் மூலம் கிரகதோஷம், நோய் நொடி விலகும் என பக்தர்கள் நம்புகின்றனர். மூலவர் லட்சுமி நாராயணர் சன்னிதியின் பின்புறம் நின்று பார்த்தால் மூலவர், தாயார், ராமர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் ஆகிய சன்னிதியின் விமானத்தையும் ஒருசேர தரிசிக்கலாம்.
மட்டைத் தேங்காய்: பல காரணங்களால் திருமணம் தடைபட்டு நொந்து போய் உள்ளவர்கள், மட்டைத் தேங்காயை லட்சுமி நாராயணர் முன் வைத்து வழிபாடு செய்து எடுத்துச் செல்கின்றனர். இதனை வீட்டில் வைத்து தினமும் வழிபட்டால், மூன்று மாதத்திற்குள் திருமண யோகம் உண்டாகும் என்பது ஐதீகம். இங்குள்ள பக்த ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தி, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்கின்றனர்.
இருப்பிடம்: விழுப்புரத்தில் இருந்து வளவனூர் 10 கி.மீ., இங்கிருந்து மடுக்கரை சாலையில் 5 கி.மீ.,
நேரம்: காலை 7.00 மணி- இரவு 8.00 மணி
அலைபேசி: 99428 39774, 82205 85308, 98423 98923.
விழுப்புரம் அருகிலுள்ள சிறுவந்தாடு கிராமத்தில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி சனிக்கிழமையன்று மட்டைத் தேங்காய் கட்டி வழிபட்டால், மூன்றே மாதத்தில் திருமண யோகம் வரும் என்கின்றனர்.
தல வரலாறு: சோழ மன்னன் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில். விஜயநகர மன்னர் அச்சுதராயர் இங்கு திருப்பணி செய்ததாக கல்வெட்டு கூறுகிறது.
தற்போதுள்ள கோவில் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மண்டபம் முழுவதும் கருங்கல்லாலும், விமானம் மட்டும் சுதையாலும் ஆனது. கருவறையில் மூலவர் சுகாசனத்தில் அமர்ந்து, லட்சுமி தாயாரை வலது மடியில் தாங்கியபடி காட்சி தருகிறார். தாயார் வலக்கையால் பெருமாளை அணைத்த படியும், இடக்கையில் தாமரை மலரை ஏந்தியும் இருக்கிறார். கருவறை எதிரில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார். அர்த்தமண்டபத்தில் கனகவல்லி தாயார் சன்னிதி உள்ளது. கோதண்டராமர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. எலுமிச்சை மரமே இங்கு தல விருட்சம்.
பல்லி வழிபாடு: அர்த்த மண்டபத்தின் விதானத்தில் பல்லி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலுள்ள பல்லியைப் போலவே இதன் உருவ அமைப்பு உள்ளது. இதை தொட்டு வணங்குவதன் மூலம் கிரகதோஷம், நோய் நொடி விலகும் என பக்தர்கள் நம்புகின்றனர். மூலவர் லட்சுமி நாராயணர் சன்னிதியின் பின்புறம் நின்று பார்த்தால் மூலவர், தாயார், ராமர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் ஆகிய சன்னிதியின் விமானத்தையும் ஒருசேர தரிசிக்கலாம்.
மட்டைத் தேங்காய்: பல காரணங்களால் திருமணம் தடைபட்டு நொந்து போய் உள்ளவர்கள், மட்டைத் தேங்காயை லட்சுமி நாராயணர் முன் வைத்து வழிபாடு செய்து எடுத்துச் செல்கின்றனர். இதனை வீட்டில் வைத்து தினமும் வழிபட்டால், மூன்று மாதத்திற்குள் திருமண யோகம் உண்டாகும் என்பது ஐதீகம். இங்குள்ள பக்த ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தி, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்கின்றனர்.
இருப்பிடம்: விழுப்புரத்தில் இருந்து வளவனூர் 10 கி.மீ., இங்கிருந்து மடுக்கரை சாலையில் 5 கி.மீ.,
நேரம்: காலை 7.00 மணி- இரவு 8.00 மணி
அலைபேசி: 99428 39774, 82205 85308, 98423 98923.

No comments:

Post a Comment